Monday, 31 October 2016

வீட்டு மனையின் வாஸ்து

வசதி படைத்தவர்களுக்கு இது ஒரு பெரிய வசயமல்ல நடுத்தர  மக்கள்   நம்ம தகுதிக்குத் தகுந்த மாதிரிதானே மனையை வாங்கப் போறோம். இதிலே அளவு பத்தி கவலைப்பட என்ன இருக்குனு யோசிக்கலாம்.
 அதிகபட்சமா நீங்க வாங்கப் போற அளவைப் பத்தி கவலையில்லை. ஆனா, குறைந்தபட்சமா நீங்க வாங்கறதுக்குனு ஓர் அளவு இருக்கு. அந்த அளவுக்குக் கீழே போனா, உள்ளாட்சி அமைப்பு வீடு கட்ட அங்கீகாரம் கொடுக்காது. அந்த அங்கீகாரம் இல்லைன்னா, அந்த மனையில் எதுவுமே செய்யமுடியாது. நீங்க வாங்கப்போற மனை மாநகராட்சியிலோ, நகராட்சியிலோ இருந்தா 900 ச.அடி பரப்பளவுக்குக் குறையாம இருக்கணும். கிராமப் பஞ்சாயத்துன்னா 600 ச.அடி பரப்பளவுக்குக் குறையாம இருக்கணும். அப்போதான் லே அவுட் அப்ரூவல் கிடைக்கும்.
கல்வி, மருத்துவம், குடிநீர் வசதி இருக்கிறதா? என்றும் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும். விலை குறைவாக இருக்கிறது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு வசிப்பிடத்தை தேர்வுசெய்யக்கூடாது. இந்த வசதிகள் எல்லாம் நிறைந்திருக்கிறதா? என்பதை உறுதி செய்வது நல்லது. அதிலும் எதிர்காலத்தில் வளர்ச்சி அடையும் பகுதியாக முதலீட்டுக்கு சாதகமாக இருக்கும் இடத்தில் வீடு கட்டி குடியேறுவதற்கு முனைப்பு காட்டக்கூடாது. 

 அதுபோல் முதலீடு நோக்கத்திற்காக மனை வாங்க தேர்வு செய்யும் பகுதியில் கட்டமைப்பு வசதிகள் குறைந்து காணப்படலாம். அதற்காக அந்த இடம் வளர்ச்சி அடையாது என்று முடிவு செய்துவிடக்கூடாது. நீண்டகாலத்துக்கு பிறகு வளர்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பதை நன்கு விசாரித்துவிட்டு அங்கு மனை வாங்குவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும்.



வீட்டு மனை வாஸ்து  

துர வடிவில் இருக்கும் மனை முதல்தரமான நன்மைகளை அளிக்க வல்லது. அனைத்து திசையிலும் சமமான அளவு இருக்கும் மனைகள் வாழ்வதற்கு ஏற்ற அற்புதமான இடம் என வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. 

சதுர மனைகளில் வீடு கட்டி குடியேறும் போது அந்தக் குடும்பத்தினருக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். வியாபாரிகள், அரசு ஊழியர்களுக்கு இந்த மனை ஏற்றது. 

சதுர மனைக்கு அடுத்தபடியாக செவ்வக மனை வருகிறது. இது சதுர மனை அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல பலன்களை வழங்கும். 40க்கு 60 அல்லது 60க்கு 40 என்ற நீள-அகலத்தில் உள்ளது செவ்வக மனைகளாகும். அரசு தொடர்பான பணியில் இருப்பவர்கள், அமைச்சர்களுக்கு இதுபோன்ற அமைப்புடைய மனை ஏற்றத்தைத் தரும். 

பொதுவாகவே சதுரம் மற்றும் செவ்வக மனைகளே வாழ்வதற்கு தகுதியானவை. இவை தவிர பாம்பு மனை (நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் இருப்பவை- 30க்கு 120) என்று குறிப்பிடும் அமைப்பில் மனைகள் உள்ளன. 

பாம்பு மனைகளில் வீடு கட்டி குடியேறினால் அந்தக் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து நோய்கள், பிரச்சனைகள் ஏற்படும். எனவே, பாம்பு மனை போன்ற அமைப்பை உடையவர்கள், வீடு கட்டுவதற்கு முன்பாக கட்டிடம் எழுப்பும் பகுதியை முடிந்த வரை செவ்வகமாக அல்லது சதுரமாக மாற்றிக் கொள்வது நல்ல பலனைத் தரும். மீதமுள்ள இடத்தை காலியிடமாக விட்டு விடலாம்.

ஒருவேளை அப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டால், பாம்பு மனையில் தரைத்தளத்தை வாகனம் நிறுத்துவதற்கு உரிய இடமாக மாற்றி விட்டு, முதல் தளத்தில் இருந்து குடியிருப்பு பகுதியை அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பாம்பு மனையால் ஏற்படும் தாக்கத்தை (நோய், வழக்கு, திடீர் மரணம், விபத்து) குறைத்து விட முடியும்.

வீடு கட்ட வாஸ்து செய்வது எப்படி?


          வாஸ்துபுருஷன்  ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத் தில் இருப்பார்.   சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஜப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நாழிகைகள் முழித்திருப்பார். அப்போது பல் துலக்குவது, ஸ்நானம் செய்வது போன்ற செயல்களைச் செய்வார். அதன்பிறுகு மறுபடியும் உறங்கச் செல்வார். எனவே அவர்  உணவு சாப்பிட ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரத்துக்குள் மனை முகூர்த்தம் செய்ய வேண்டும். வீடு கட்ட வாஸ்து செய்வது எப்படி?
வீட்டின் தலைவாசல் வைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
          வாஸ்துபுருஷன்  படுத்திருக்கும் நிலை மற்றும் திசையை அறிந்து அதற்கேற்ப தலைவாசல் வைக்க வேண்டும். எந்த மாதத்தில்  வீடுகட்டு கிறோமோ, அந்தந்த மாதத்திற்கு ஏற்ப தலை வாசல் வைக்கும் திசை மாறுபடும். வாஸ்துபுருஷன் அந் தந்த மாதத்தைக் குறிக்கும் ராசி எதுவோ அதில் தன் காலை நீட்டிய படியும், அந்த ராசியிலிருந்து  ஏழாவது ராசியில் தலையை வைத்தும் இட கையை தலையிலும் வலது கையை மேலேயும் வைத்துக் கொண்டு படுத்து இருப்பார். உதாரணமாக, சித்திரை மற்றும் வைகாசி ஆகிய மாதங்களில் மேற்கே தலை வைத்துப் படுத்திருப்பார் அதனால் அம்மாதங்களிள் மேற்கே வாசல் வைக்கக் கூடாது. வாஸ்துபுருஷன் கிழக்கே கால் நீட்டி இருக்கும் சமயங்களில் கிழக்கில் வாசல் கூடாது. இவ்வாறே தெற்குப் புறமும் வாசல் இருப்பது கூடாது. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் திசையான வடக்குப் புறத்தில் மட்டும்தான் தலைவாசல் வைக்க வேண்டும். வீடு கட்ட வாஸ்து செய்வது எப்படி?

          வாஸ்துபுருஷன் சயனத்தில இருக்கும் பொழுது, அவரது தலை இருக்கும் பகுதியில் வாசல் வைத்தால் கணவருக்கு பாதிப்புகளும், கெடுதிகளும் நேரும். அவரவர் ராசிக்கேற்ற திசையை அறிந்து அதன்படி தலைவாசல் வைக்கலாம்.

          மேஷத்தில் பிறந்தவர்களுக்கு வடக்கு திசையும், ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு தெற்கும், துலாத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாத் திசை களும், கும்பத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கும் ஏற்றதாகும்

           இபபொழுது நிறையபோ் நுழைவு வாயிலுக்கு எதிராக நிலைக் கண்ணாடி வைக்கிறார்கள்  இதனால்.நமது வீட்டுக்குள்  நன்மை தரும் ஆற்றல் வராமல் திரும்ப வெளியே போய்விடும் இதனால் வீட்டில் நன்மைகள் ஏற்படாது. வீடு கட்ட வாஸ்து செய்வது எப்படி?

          வீட்டிற்கு எதிரே வெற்றுச் சுவர் இருப்பது அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நல்லது இல்லை. நமது குடும்பத்தில் கண்டை சச்சரவுகளும் வீண் செலவுகளும் ஏற்படும்.  சிலரது வீடுகளில் அதிர்ஷ்ட  மீன் தொட்டியை வைத்திருப்பார்கள்.  மீன் தொட்டியை வீட்டின் தலைவாசல் கதவின் வலது புறம் வைக்கக் கூடாது படுக்கை அறையிலும் சமையல் அறையிலும்  வைக்கக் கூடாது.

வீட்டை எப்படி அமைக்கலாம்
1. தென்கிழக்கு திசையில் சமையல் அறை வைக்க வேண்டும்
2. கிழக்கு திசையில் படிக்கும் அறை நுழை வாயில் குடிநீர் குழாய் குளியல் அறை வைக்க வேண்டும்
3.தெற்கு திசையில் சாப்பிடும் அறை படுக்கை அறை வைக்கலாம்
4.தென்மேற்கு திசையில் புத்தக அறையை வைக்கலாம்
5.மேற்கு திசையில் நமது பிள்ளைகளின் படுக்கை அறை வைக்கலாம்
6.வடக்கு திசையில் பண்ம் பீரோ பொருள் சேமிக்கும் அறை வைக்கலாம்
7. வடமேற்கு .திசையில். க்க்கூஸ் கழிவு நீர் அலுவலக அறை வைக்கலாம்
8.மேற்கு வடகிழக்குத் திசையில் பூஜை அறைகள் வைக்கலாம்
 வீட்டின் வாசல்களை  அமைக்கும் முறைகள்
   தலைவாசல் உயரமானதாகவும் அகலமானதாகவும் அதைவிட சின்னதாக அடுத்த வாசலும்  அதைவிட சின்னதாக அதற்கு அடுத்த வாசலும் இப்படியாக கடைசியில் பின்வாசல் முன்னதை காட்டிலும் சின்னதாக வைக்க வேண்டும் தலைவாசல் மற்றும் பின் வாசல்களில் அமைக்கப்படும் நிலைகளின் கீழ் பகுதியில் குறுக்குச் சட்டம்  வைக்க வேண்டும். வீடு கட்ட வாஸ்து செய்வது எப்படி?

          நாம  வீடு கட்டும்போது கல், மண், சிமென்ட், மரம் போன்றவை களை பயன்படுத்து கிறோம் இவைகள் பழைய வீட்டில் இருந்து கழித்த தாகவோ அல்லது வேறு நபரிடம் மிச்சமானதாகவோ இருக்கக் கூடாது.
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம் 
1. தலைவாசல் எப்படி அமைக்கக் கூடாது? எப்படி அமைக்க வேண்டும்?
2. என் வீட்டு கதவு சத்தம் போடுது. அதுக்கு பலன் ஏதுமுண்டா?
3. உங்களுக்கு சொந்தவீடு கிடைக்குமா? ஜாதகப்படி
4. சுவரில் விரிசல் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
5. என்ன கலர் பெயிண்ட் அடிக்கலாம் எங்க வீட்டுக்கு
6. மனை வாங்க வீடுவாங்க குடிபோக நல்ல நட்சத்திரங்கள் நல்ல நாட்கள்
7. எட்டு திசைகளும் அதன் அதிபதிகளும்
8. வாஸ்துபடி வீடுஎப்படி இருக்க வேண்டும்
9. புது மனை எப்படி இருந்தால் நல்லது
10. திருமண மேடையும் வாஸ்துசாஸ்திரமும்
11. வீட்டின் அளவுகளும் அதற்கான பலன்களும் 
12. வாசல்களும் அதற்கான பலன்களும்
13. வாசல்கள் எவ்வாறு அமைய வேணடும் ?
14. கதவுககளின் எண்ணிக்கையும் அதற்கான பலன்களும்
15. நமது வீட்டின் அமைப்பு வாஸ்துசாஸ்திரப்படி உள்ளதா?
16. வீடுகட்ட வாஸ்துசெய்வது எப்படி?
17. வீடுகட்டும் மனை எப்படி இருந்தால் நல்லது?
18. வாஸ்துசாஸ்திரம் என்றால் என்ன? ​
19. bus tickets booking websites online bus booking all websites bus ticket booking 
20. indian vegetable prices daily list
21 இலவச ஜோதிடம் இலவச ஜாதக கட்டம்

1 comment:

  1. Slot Machines - DrmCD
    Slot Machines and their game styles are 대전광역 출장마사지 some of the best 세종특별자치 출장안마 video game designers. These 여수 출장샵 games have 서울특별 출장마사지 all the hallmarks of gaming success as the primary theme. · The 경산 출장샵

    ReplyDelete