Wednesday, 2 November 2016

 சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு :-
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன்,
ஆனால் வலியின் அளவுகூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார்.
சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை,
உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன்.
இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன்,
இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும்,
இன்னும் அதிகமாக குடிக்கமுடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன்,
வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும்,
அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும்.
கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்துரத்தமும் வரலாம்,
ஒரு நாளில் சரியாகிவிடும்.மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் படித்ததில் சில :
துளசி இலை(basil) :
இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) :
அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம். திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ):
இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) :
இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ):
நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் :
இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் :
வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 :
கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
குறிப்பு 2 :
இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம்.
இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

Monday, 31 October 2016


வீட்டு மனையின் வாஸ்து

வசதி படைத்தவர்களுக்கு இது ஒரு பெரிய வசயமல்ல நடுத்தர  மக்கள்   நம்ம தகுதிக்குத் தகுந்த மாதிரிதானே மனையை வாங்கப் போறோம். இதிலே அளவு பத்தி கவலைப்பட என்ன இருக்குனு யோசிக்கலாம்.
 அதிகபட்சமா நீங்க வாங்கப் போற அளவைப் பத்தி கவலையில்லை. ஆனா, குறைந்தபட்சமா நீங்க வாங்கறதுக்குனு ஓர் அளவு இருக்கு. அந்த அளவுக்குக் கீழே போனா, உள்ளாட்சி அமைப்பு வீடு கட்ட அங்கீகாரம் கொடுக்காது. அந்த அங்கீகாரம் இல்லைன்னா, அந்த மனையில் எதுவுமே செய்யமுடியாது. நீங்க வாங்கப்போற மனை மாநகராட்சியிலோ, நகராட்சியிலோ இருந்தா 900 ச.அடி பரப்பளவுக்குக் குறையாம இருக்கணும். கிராமப் பஞ்சாயத்துன்னா 600 ச.அடி பரப்பளவுக்குக் குறையாம இருக்கணும். அப்போதான் லே அவுட் அப்ரூவல் கிடைக்கும்.
கல்வி, மருத்துவம், குடிநீர் வசதி இருக்கிறதா? என்றும் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும். விலை குறைவாக இருக்கிறது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு வசிப்பிடத்தை தேர்வுசெய்யக்கூடாது. இந்த வசதிகள் எல்லாம் நிறைந்திருக்கிறதா? என்பதை உறுதி செய்வது நல்லது. அதிலும் எதிர்காலத்தில் வளர்ச்சி அடையும் பகுதியாக முதலீட்டுக்கு சாதகமாக இருக்கும் இடத்தில் வீடு கட்டி குடியேறுவதற்கு முனைப்பு காட்டக்கூடாது. 

 அதுபோல் முதலீடு நோக்கத்திற்காக மனை வாங்க தேர்வு செய்யும் பகுதியில் கட்டமைப்பு வசதிகள் குறைந்து காணப்படலாம். அதற்காக அந்த இடம் வளர்ச்சி அடையாது என்று முடிவு செய்துவிடக்கூடாது. நீண்டகாலத்துக்கு பிறகு வளர்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பதை நன்கு விசாரித்துவிட்டு அங்கு மனை வாங்குவதற்கு பரிசீலனை செய்ய வேண்டும்.



வீட்டு மனை வாஸ்து  

துர வடிவில் இருக்கும் மனை முதல்தரமான நன்மைகளை அளிக்க வல்லது. அனைத்து திசையிலும் சமமான அளவு இருக்கும் மனைகள் வாழ்வதற்கு ஏற்ற அற்புதமான இடம் என வாஸ்துவில் கூறப்பட்டுள்ளது. 

சதுர மனைகளில் வீடு கட்டி குடியேறும் போது அந்தக் குடும்பத்தினருக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். வியாபாரிகள், அரசு ஊழியர்களுக்கு இந்த மனை ஏற்றது. 

சதுர மனைக்கு அடுத்தபடியாக செவ்வக மனை வருகிறது. இது சதுர மனை அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நல்ல பலன்களை வழங்கும். 40க்கு 60 அல்லது 60க்கு 40 என்ற நீள-அகலத்தில் உள்ளது செவ்வக மனைகளாகும். அரசு தொடர்பான பணியில் இருப்பவர்கள், அமைச்சர்களுக்கு இதுபோன்ற அமைப்புடைய மனை ஏற்றத்தைத் தரும். 

பொதுவாகவே சதுரம் மற்றும் செவ்வக மனைகளே வாழ்வதற்கு தகுதியானவை. இவை தவிர பாம்பு மனை (நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் இருப்பவை- 30க்கு 120) என்று குறிப்பிடும் அமைப்பில் மனைகள் உள்ளன. 

பாம்பு மனைகளில் வீடு கட்டி குடியேறினால் அந்தக் குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து நோய்கள், பிரச்சனைகள் ஏற்படும். எனவே, பாம்பு மனை போன்ற அமைப்பை உடையவர்கள், வீடு கட்டுவதற்கு முன்பாக கட்டிடம் எழுப்பும் பகுதியை முடிந்த வரை செவ்வகமாக அல்லது சதுரமாக மாற்றிக் கொள்வது நல்ல பலனைத் தரும். மீதமுள்ள இடத்தை காலியிடமாக விட்டு விடலாம்.

ஒருவேளை அப்படி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டால், பாம்பு மனையில் தரைத்தளத்தை வாகனம் நிறுத்துவதற்கு உரிய இடமாக மாற்றி விட்டு, முதல் தளத்தில் இருந்து குடியிருப்பு பகுதியை அமைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பாம்பு மனையால் ஏற்படும் தாக்கத்தை (நோய், வழக்கு, திடீர் மரணம், விபத்து) குறைத்து விட முடியும்.

வீடு கட்ட வாஸ்து செய்வது எப்படி?


          வாஸ்துபுருஷன்  ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத் தில் இருப்பார்.   சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஜப்பசி, கார்த்திகை, தை மற்றும் மாசி ஆகிய மாதங்களில் குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட நாழிகைகள் முழித்திருப்பார். அப்போது பல் துலக்குவது, ஸ்நானம் செய்வது போன்ற செயல்களைச் செய்வார். அதன்பிறுகு மறுபடியும் உறங்கச் செல்வார். எனவே அவர்  உணவு சாப்பிட ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரத்துக்குள் மனை முகூர்த்தம் செய்ய வேண்டும். வீடு கட்ட வாஸ்து செய்வது எப்படி?
வீட்டின் தலைவாசல் வைக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்
          வாஸ்துபுருஷன்  படுத்திருக்கும் நிலை மற்றும் திசையை அறிந்து அதற்கேற்ப தலைவாசல் வைக்க வேண்டும். எந்த மாதத்தில்  வீடுகட்டு கிறோமோ, அந்தந்த மாதத்திற்கு ஏற்ப தலை வாசல் வைக்கும் திசை மாறுபடும். வாஸ்துபுருஷன் அந் தந்த மாதத்தைக் குறிக்கும் ராசி எதுவோ அதில் தன் காலை நீட்டிய படியும், அந்த ராசியிலிருந்து  ஏழாவது ராசியில் தலையை வைத்தும் இட கையை தலையிலும் வலது கையை மேலேயும் வைத்துக் கொண்டு படுத்து இருப்பார். உதாரணமாக, சித்திரை மற்றும் வைகாசி ஆகிய மாதங்களில் மேற்கே தலை வைத்துப் படுத்திருப்பார் அதனால் அம்மாதங்களிள் மேற்கே வாசல் வைக்கக் கூடாது. வாஸ்துபுருஷன் கிழக்கே கால் நீட்டி இருக்கும் சமயங்களில் கிழக்கில் வாசல் கூடாது. இவ்வாறே தெற்குப் புறமும் வாசல் இருப்பது கூடாது. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் திசையான வடக்குப் புறத்தில் மட்டும்தான் தலைவாசல் வைக்க வேண்டும். வீடு கட்ட வாஸ்து செய்வது எப்படி?

          வாஸ்துபுருஷன் சயனத்தில இருக்கும் பொழுது, அவரது தலை இருக்கும் பகுதியில் வாசல் வைத்தால் கணவருக்கு பாதிப்புகளும், கெடுதிகளும் நேரும். அவரவர் ராசிக்கேற்ற திசையை அறிந்து அதன்படி தலைவாசல் வைக்கலாம்.

          மேஷத்தில் பிறந்தவர்களுக்கு வடக்கு திசையும், ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு தெற்கும், துலாத்தில் பிறந்தவர்களுக்கு எல்லாத் திசை களும், கும்பத்தில் பிறந்தவர்களுக்கு மேற்கும் ஏற்றதாகும்

           இபபொழுது நிறையபோ் நுழைவு வாயிலுக்கு எதிராக நிலைக் கண்ணாடி வைக்கிறார்கள்  இதனால்.நமது வீட்டுக்குள்  நன்மை தரும் ஆற்றல் வராமல் திரும்ப வெளியே போய்விடும் இதனால் வீட்டில் நன்மைகள் ஏற்படாது. வீடு கட்ட வாஸ்து செய்வது எப்படி?

          வீட்டிற்கு எதிரே வெற்றுச் சுவர் இருப்பது அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நல்லது இல்லை. நமது குடும்பத்தில் கண்டை சச்சரவுகளும் வீண் செலவுகளும் ஏற்படும்.  சிலரது வீடுகளில் அதிர்ஷ்ட  மீன் தொட்டியை வைத்திருப்பார்கள்.  மீன் தொட்டியை வீட்டின் தலைவாசல் கதவின் வலது புறம் வைக்கக் கூடாது படுக்கை அறையிலும் சமையல் அறையிலும்  வைக்கக் கூடாது.

வீட்டை எப்படி அமைக்கலாம்
1. தென்கிழக்கு திசையில் சமையல் அறை வைக்க வேண்டும்
2. கிழக்கு திசையில் படிக்கும் அறை நுழை வாயில் குடிநீர் குழாய் குளியல் அறை வைக்க வேண்டும்
3.தெற்கு திசையில் சாப்பிடும் அறை படுக்கை அறை வைக்கலாம்
4.தென்மேற்கு திசையில் புத்தக அறையை வைக்கலாம்
5.மேற்கு திசையில் நமது பிள்ளைகளின் படுக்கை அறை வைக்கலாம்
6.வடக்கு திசையில் பண்ம் பீரோ பொருள் சேமிக்கும் அறை வைக்கலாம்
7. வடமேற்கு .திசையில். க்க்கூஸ் கழிவு நீர் அலுவலக அறை வைக்கலாம்
8.மேற்கு வடகிழக்குத் திசையில் பூஜை அறைகள் வைக்கலாம்
 வீட்டின் வாசல்களை  அமைக்கும் முறைகள்
   தலைவாசல் உயரமானதாகவும் அகலமானதாகவும் அதைவிட சின்னதாக அடுத்த வாசலும்  அதைவிட சின்னதாக அதற்கு அடுத்த வாசலும் இப்படியாக கடைசியில் பின்வாசல் முன்னதை காட்டிலும் சின்னதாக வைக்க வேண்டும் தலைவாசல் மற்றும் பின் வாசல்களில் அமைக்கப்படும் நிலைகளின் கீழ் பகுதியில் குறுக்குச் சட்டம்  வைக்க வேண்டும். வீடு கட்ட வாஸ்து செய்வது எப்படி?

          நாம  வீடு கட்டும்போது கல், மண், சிமென்ட், மரம் போன்றவை களை பயன்படுத்து கிறோம் இவைகள் பழைய வீட்டில் இருந்து கழித்த தாகவோ அல்லது வேறு நபரிடம் மிச்சமானதாகவோ இருக்கக் கூடாது.
வாஸ்து , வாஸ்துசாஸ்திரம் 
1. தலைவாசல் எப்படி அமைக்கக் கூடாது? எப்படி அமைக்க வேண்டும்?
2. என் வீட்டு கதவு சத்தம் போடுது. அதுக்கு பலன் ஏதுமுண்டா?
3. உங்களுக்கு சொந்தவீடு கிடைக்குமா? ஜாதகப்படி
4. சுவரில் விரிசல் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?
5. என்ன கலர் பெயிண்ட் அடிக்கலாம் எங்க வீட்டுக்கு
6. மனை வாங்க வீடுவாங்க குடிபோக நல்ல நட்சத்திரங்கள் நல்ல நாட்கள்
7. எட்டு திசைகளும் அதன் அதிபதிகளும்
8. வாஸ்துபடி வீடுஎப்படி இருக்க வேண்டும்
9. புது மனை எப்படி இருந்தால் நல்லது
10. திருமண மேடையும் வாஸ்துசாஸ்திரமும்
11. வீட்டின் அளவுகளும் அதற்கான பலன்களும் 
12. வாசல்களும் அதற்கான பலன்களும்
13. வாசல்கள் எவ்வாறு அமைய வேணடும் ?
14. கதவுககளின் எண்ணிக்கையும் அதற்கான பலன்களும்
15. நமது வீட்டின் அமைப்பு வாஸ்துசாஸ்திரப்படி உள்ளதா?
16. வீடுகட்ட வாஸ்துசெய்வது எப்படி?
17. வீடுகட்டும் மனை எப்படி இருந்தால் நல்லது?
18. வாஸ்துசாஸ்திரம் என்றால் என்ன? ​
19. bus tickets booking websites online bus booking all websites bus ticket booking 
20. indian vegetable prices daily list
21 இலவச ஜோதிடம் இலவச ஜாதக கட்டம்

வீட்டு மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்.....

வீட்டு மனை வாங்குவது இப்போது அதிகரித்துவருகிறது. பின்னால் வீடு கட்டுவதற்காகவும், சந்ததியினருக்கான
முதலீடாகவும் இந்த வீட்டு மனை இப்போது பார்க்கப்படுகிறது




இன்றைக்கு வேலையின் பொருட்டு வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டியிருப்பதால் அங்கேயே தங்களுக்கான வீட்டு மனைகளை வாங்கிவருகிறார்கள். சிலர் நில மதிப்பு உயரும் சாத்தியம் உள்ள பகுதிகளைத் தேடி முதலீடு செய்கிறார்கள். இம்மாதிரி தெரியாத இடத்தில் வீட்டு மனை வாங்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.நமது சொந்த ஊரில் மனை வாங்கும்போது அந்த நிலத்தில் உள்ள வில்லங்கம், வாரிசுகள் யாரும் இருக்கிறார்களா என்பன போன்ற விவரங்கள் தெரியவரும். அல்லது குறைந்தபட்சம் நாம் வசிக்கும் இடத்திற்கு அருகில் என்றால் அந்தச் சம்பந்தப்பட்ட இடத்தைத் தொடர்ந்து பார்வையிட முடியும். தரகர்களை மட்டுமே நம்பி வெளியூரில் வீட்டு மனை வாங்கும்போது பல விஷயங்களில் நாம்தான் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும்.
நாம் வாங்கப் போகும் இடம் வீடு கட்டுவதற்கான நிலமாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தெளிவுபெற வேண்டும்.
காலி நிலங்களை வீட்டு மனைகளாகப் பிரித்து விற்கும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தினர் உள்ளாட்சிகளுக்கான வழித்தடத்திற்கு இடம் ஒதுக்க வேண்டும். அப்படி ஒதுக்கவில்லை என்றால் அந்த இடத்தை நாம் கொடுக்க வேண்டியிருக்கும்.
அதனால் முறையாக உள்ளாட்சிகளின் வழித்தடத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துகொள்ளுங்கள். உள்ளாட்சிகளுக்கு முறையாக இடம் ஒதுக்கும்போதுதான் அந்த அமைப்பு நம் பகுதிக்கான சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதரும்.
வெளியூர்களில் இதுமாதிரி விற்பனைசெய்யப்படும் இடங்களில் பெரும்பாலானவை முறைப்படி உள்ளாட்சிகளுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருக்கிறது. அடிப்படை வசதிகள் கோரி உள்ளாட்சி அமைப்புகளுக்குச் செல்லும்போதுதான் இது நமக்குத் தெரிய வரும். அதுபோல ஊருக்கு வெளியே நிலம் வாங்கும்போது அதில் ஓடைகள், வாய்க்கால் போன்ற மழைநீர்ப் பாதைகள் இருந்தனவா என்பதைக் குறித்து விசாரித்து அறிந்துகொள்ள வேண்டியது.மழைநீர் வரும் பாதை என்றால் பிற்காலத்தில் பிரச்சினைகள் வரக் கூடும். மேலும் மழைக்காலத்தில் நீர் தேங்கும். முக்கியமான பிரச்சினை இம்மாதிரியான நிலத்தில் நிலத்தடி மண் ஈரத்தன்மையுடன் இருக்கும். அதனால் கட்டிடத்திற்கான அஸ்திவாரம் வலுவாக இட வேண்டியதிருக்கும்.
மனையின் சாலை அளவு உள்ளாட்சி அமைப்பைப் பொறுத்து மாறுபடும். மாநகராட்சி என்றால் 24 அடி, நகராட்சி என்றால் 23 அடி இருக்க வேண்டும். அப்போதான் உங்க மனைக்கு அப்ரூவல் கிடைக்கும்.
லே அவுட்டில் மனையைப் பார்க்கும்போது சாலை எத்தனை அடி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுக் கடன் வாங்கும்போது, முதலில் கேட்கப்படும் விஷயம் லே அவுட் அங்கீகாரம்தான்.
மனையின் மீது உயர் மின் அழுத்த கோபுர உயர்கள் செல்கின்றனவா அந்த இடத்தில் கிணறு அல்லது ஏதேனும் பள்ளம் இருந்தனவா போன்ற விபரங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்...